இந்த வருடம் மீண்டும் 'பயாலஜி' வந்துள்ளது.இம்முறை விருப்பப் பாடமாக எடுத்துப் படிக்கிறாள்.
சில மாதங்களுக்குமுன் 'மூளை'யைப் பற்றி படித்துக்கொண்டிருந்தனர்.
ஒரு நாள் காலை திடீரென 'அம்மா இனி எனக்கு காலையில் cereal / சீரியல் வேண்டாம்' என்றாள்.
நான் பரவாயில்லையே,இந்த சீரியல் பழக்கத்தை எப்படி நிறுத்துவது என நினைத்திருந்தேன்.அவளாகவே நிறுத்திவிட்டாளே என எண்ணி 'இட்லி ஊத்தவா' என்றேன்.
'ஒரு ஆம்லெட்டும்,1/2 கப் பாலும் போதும்மா' என்றாள்.
'காலையிலேயே முட்டை சாப்பிடப்போறியா!' என்றேன்.
'முட்டையில் நிறைய புரோட்டீன் இருக்குமா,காலையில் புரோட்டீன் எடுத்துக்கிட்டா it will wake you up,மூளைக்கு நல்லது' என்றாள்.
'இதுக்கு சீரியலே பரவாயில்லை' என நினைத்துக்கொண்டேன்.
பின்ன என்னங்க, perfect omelet னு தேடித்தேடி எல்லாம் செய்து முடித்து,இப்போது தாளிக்கும் கரண்டி ஆம்லெட் செய்துகொண்டிருக்கிறேன்.
வீட்டுக்காரர் ஒரு இரண்டு நாட்கள் பொறுத்துப் பார்த்தார்.அடுத்த நாள் கேட்டேவிட்டார்.
'காலையிலேயே என்ன பன்ற' என்றார்.நான் விஷயத்தைச் சொல்லவும் சரியென்று விட்டுவிட்டார்.
ஆனாலும் அன்று மாலை இதைவைத்து மகளை ஓட்டப்போகிறார் என்பது மட்டும் புரிந்தது.
தினமும் மாலையில் இவர் ஆஃபீஸ் விட்டு வீட்டுக்கு வந்து உள்ளே நுழையும் முன்னமே இவள் 'you know what' என்று ஆரம்பித்து அன்று முழுவதும் நடந்ததை எல்லாம் ஒன்று விடாமல் தூங்கப் போகும்வரை சொல்லிக்கொண்டே இருப்பாள்.
அன்றும் அப்படித்தான்,எப்போதும்போல் பேச ஆரம்பித்தாள்.
கொஞ்ச நேரம் அவள் சொன்னதையெல்லாம் கேட்டுவிட்டு 'என்ன காலையிலேயே ஆம்லெட் சாப்பிற்றயாமே' என ஆரம்பித்தார்.
அவளும் சீரியஸாக விஷயத்தைச் சொன்னாள்.
உடனே இவர் ' நாங்க எவ்வளவோ முயற்சித்தும் முடியாமத்தானே விட்டுட்டோம்,இப்போ நீ ஆரம்பிச்சிருக்க,இனிமேலாவது நடக்குதான்னு பார்க்கலாம்'என்றார்.
அவ்வ்வ்வ் என இரண்டு கை விரல்களையும் அவரது முகத்தருகே கொண்டு சென்றாள்.பின்னர் என்பக்கம் திரும்பி 'அம்ம்மாஆஆ,அப்பாவுக்கு எல்லாமே ஜோக்தானா, எதையுமே சீரியஸா எடுத்துக்க மாட்டாரா' என்றாள்.
'இதையெல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டா என் நிலை என்னாவது' என நினைத்து மனதிற்குள்ளேயே சிரித்துக்கொண்டேன்.
___________________ _ _ _ ___________________ _ _ _ _________________________
சில மாதங்களுக்குமுன் 'மூளை'யைப் பற்றி படித்துக்கொண்டிருந்தனர்.
ஒரு நாள் காலை திடீரென 'அம்மா இனி எனக்கு காலையில் cereal / சீரியல் வேண்டாம்' என்றாள்.
நான் பரவாயில்லையே,இந்த சீரியல் பழக்கத்தை எப்படி நிறுத்துவது என நினைத்திருந்தேன்.அவளாகவே நிறுத்திவிட்டாளே என எண்ணி 'இட்லி ஊத்தவா' என்றேன்.
'ஒரு ஆம்லெட்டும்,1/2 கப் பாலும் போதும்மா' என்றாள்.
'காலையிலேயே முட்டை சாப்பிடப்போறியா!' என்றேன்.
'முட்டையில் நிறைய புரோட்டீன் இருக்குமா,காலையில் புரோட்டீன் எடுத்துக்கிட்டா it will wake you up,மூளைக்கு நல்லது' என்றாள்.
'இதுக்கு சீரியலே பரவாயில்லை' என நினைத்துக்கொண்டேன்.
பின்ன என்னங்க, perfect omelet னு தேடித்தேடி எல்லாம் செய்து முடித்து,இப்போது தாளிக்கும் கரண்டி ஆம்லெட் செய்துகொண்டிருக்கிறேன்.
வீட்டுக்காரர் ஒரு இரண்டு நாட்கள் பொறுத்துப் பார்த்தார்.அடுத்த நாள் கேட்டேவிட்டார்.
'காலையிலேயே என்ன பன்ற' என்றார்.நான் விஷயத்தைச் சொல்லவும் சரியென்று விட்டுவிட்டார்.
ஆனாலும் அன்று மாலை இதைவைத்து மகளை ஓட்டப்போகிறார் என்பது மட்டும் புரிந்தது.
தினமும் மாலையில் இவர் ஆஃபீஸ் விட்டு வீட்டுக்கு வந்து உள்ளே நுழையும் முன்னமே இவள் 'you know what' என்று ஆரம்பித்து அன்று முழுவதும் நடந்ததை எல்லாம் ஒன்று விடாமல் தூங்கப் போகும்வரை சொல்லிக்கொண்டே இருப்பாள்.
அன்றும் அப்படித்தான்,எப்போதும்போல் பேச ஆரம்பித்தாள்.
கொஞ்ச நேரம் அவள் சொன்னதையெல்லாம் கேட்டுவிட்டு 'என்ன காலையிலேயே ஆம்லெட் சாப்பிற்றயாமே' என ஆரம்பித்தார்.
அவளும் சீரியஸாக விஷயத்தைச் சொன்னாள்.
உடனே இவர் ' நாங்க எவ்வளவோ முயற்சித்தும் முடியாமத்தானே விட்டுட்டோம்,இப்போ நீ ஆரம்பிச்சிருக்க,இனிமேலாவது நடக்குதான்னு பார்க்கலாம்'என்றார்.
அவ்வ்வ்வ் என இரண்டு கை விரல்களையும் அவரது முகத்தருகே கொண்டு சென்றாள்.பின்னர் என்பக்கம் திரும்பி 'அம்ம்மாஆஆ,அப்பாவுக்கு எல்லாமே ஜோக்தானா, எதையுமே சீரியஸா எடுத்துக்க மாட்டாரா' என்றாள்.
'இதையெல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டா என் நிலை என்னாவது' என நினைத்து மனதிற்குள்ளேயே சிரித்துக்கொண்டேன்.
___________________ _ _ _ ___________________ _ _ _ _________________________