Saturday, July 27, 2013

குடை

நாங்கள் 


 மலர்வது,


மழைக்கு மட்டுமல்ல,


நல்ல வெயிலுக்கும் கூடத்தான் !!


10 comments:

  1. Replies
    1. அழகான குடைகளுக்காகத்தான் பதிந்து வைத்தேன்.வருகைக்கு நன்றிங்க.

      Delete
  2. அடர்த்தியான செவ்வானம்
    ஆங்காங்கே கவிழ்ந்து
    சேருக்கும் டேபிளுக்கும்
    பெருமையோடு தஞ்சமளிக்க
    பாங்குடனே க்ளிக்கிய
    சித்ராவிற்கு வாழ்த்துக்கள்.

    சும்மா........ச்சும்மா.........ஒரு முயற்சி தான். (இந்த வார்த்தை விளையாட்டு )

    ReplyDelete
    Replies
    1. சில நினைவுகளுக்காக எனக்கு படத்தை பதிய வேண்டும். எழுத எதுவும் தோன்றவில்லை. அதனால ஒரு 1/2 வரியை அங்கங்கே தெளிச்சு வச்சிருக்கேன். உங்கள் கவிதை வரிகளால் அழகுபடுத்தியதற்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.

      யாரிடமும் சொல்ல வேண்டாம், காதைக் கொடுங்கோ, இந்தப் படங்களை எடுத்தது சுந்தர்தான்.

      Delete
  3. ஆஹா! சுருக்கமாக சிந்து.
    சூப்பர் போஸ்ட். :-)

    ReplyDelete
    Replies
    1. இமா,

      குடையின் டூ இன் ஒன் பயனை, திடீர் மழையும், அதைத்தொடர்ந்து வந்த வெயிலும் உணர்த்தியபோது, உதித்த ஞானோதயம்தான் (ஹி ஹி) இந்த அரை வரி. ரசித்தமைக்கு நன்றிங்க.

      Delete
  4. அட ஆமாம்! வெயில், மழை இரண்டுக்கும் குடை பயன்பட்டாலும், நாம் அதிகம் பயன்படுத்துவது மழைக்குத்தான். அதனால் குடை என்றால் மழைதான் நினைவுக்கு வருகிறது.

    இதைபோல நிறைய ஹைக்கூ எழுதுங்கள். சமையலில் மட்டுமல்ல திறமை - இப்படி புகைப்படங்களுக்கு ஹைக்கூ எழுதவும் திறமை சித்ராவிற்கு உண்டு என்று உலகிற்கு காட்டுங்கள்!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. "என்னதிது, குடை சகிதமாக டேபிள் & சேர் எல்லாம் ரெடியா இருக்கு, ஆனால் சாப்பிட ஆட்களை மட்டும் காணோம்! இனிதான் சாப்பிட வருவார்களா? அல்லது சாப்பிட்டு முடித்து போய்விட்டார்களா?", என்று உங்களிடமிருந்து ஒரு கேள்விக்கணை பாயும்னு நெனச்சுதான் இரண்டாவது படத்தையேப் போட்டேன்.

      முயற்சிக்கிறேன்,வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.

      Delete
  5. அழகான குடைகள்! அழகான இடம்!

    ReplyDelete
  6. ஆமாம் மகி, அழகான குடைகளுடன் அந்த இடமே அழகாகத்தான் இருந்தது.

    ReplyDelete