ஊருக்குச் சென்றிருந்தபோது சகோதரி வீட்டு மொட்டை மாடியிலிருந்து ரசித்த சூரிய உதயம்.
கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, இதோ வந்திடுவார் கதிரவன் !
வந் தாச் சூஊஊஊ !
தென்னை மரங்களுக்கிடையில்
மறைக்க முயலும் மேகம்
கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு,
மேகம் விலகிய பிறகு
தென்னங் கீற்றுக்கிடையில்
முழுமையடைந்த நிலையில்
**********************************************************************************
அதே இடம்தான், ஆனால் வேறொரு நாள் உதயம்.
கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, இதோ வந்திடுவார் கதிரவன் !
வந் தாச் சூஊஊஊ !
மறைக்க முயலும் மேகம்
கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு,
மேகம் விலகிய பிறகு
தென்னங் கீற்றுக்கிடையில்
முழுமையடைந்த நிலையில்
**********************************************************************************
அதே இடம்தான், ஆனால் வேறொரு நாள் உதயம்.
படங்கள் அனைத்தும் என்னே அழகு...!
ReplyDeleteவருகைக்கும், ரசித்துக் கருத்திட்டமைக்கும் நன்றி தனபாலன்.
Deleteகாலைக் கதிரவனின் கொள்ளை அழகை உங்கள் ரசனையில் கண்டு களித்தோம்.
ReplyDeleteசூப்பர் தோழி.....!
வருகைக்கும், அழகான பின்னூட்டத்திற்கும் நன்றி அனிதா.
Deleteஎத்தனைமுறை பார்த்திருப்போம் இந்த காட்சிகளை, ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அத்தனை அழகு.ரசிக்க ரசிக்க ஆனந்தம், அருமையான படங்கள். மனமார்ந்த பாராட்டு உங்கள் ரசனைக்கும், எடுத்த விதத்திற்க்கும்.
ReplyDeleteஇயற்கையைப் பார்க்கப்பார்க்க அழகுதான். வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி ராஜேஷ்.
Deleteவா..வ் சூப்பர் சித்ரா. படங்கள் அத்தனை அழகா இருக்கு. ஊரிலிருக்கும்போது சூரிய அஸ்தமனம் பார்க்க, வானத்தை ரசிக்கவென வயலுக்குபோவோம். அலுக்காத ஒன்று என்றால் அது இயற்கையை ரசிப்பது. இங்கும் மிக அழகா இருக்கும். சம்மரில் எடுக்கிறேன் போட்டோக்கள். உங்கள் ரசனை சூப்பர் சித்ரா.நன்றி அழகான பகிர்வுக்கு.
ReplyDeleteஉங்க ஊர் உதயத்தைப் பார்க்க சம்மர் வரைக்கும் வெயிட் பண்ணனுமா ? அழகான படங்கள் உதயமாகும் எனும்போது வெயிட் பண்ணினால் போயிற்று !
Deleteஓ, உதயத்தைப் பார்க்க வயலுக்குப் போவீங்களா ! பரந்து விரிந்த இடத்தில் அழகாகத்தான் இருக்கும். அடுத்த தடவ ஊருக்குப் போனால் நேரே வயலுக்குத்தான். ஆனால் அவ்வளவு காலையில் கூட்டிப்போக ஆள் வேண்டுமே, பார்க்கலாம் ! முன்பெல்லாம் எங்க தெருவில் வெளியில் நின்றே பார்த்துவிடலாம். ஆனால் இப்போது கட்டிடங்கள் வந்துவிட்டன. வருகைக்கு நன்றி ப்ரியசகி.
பொருமையாக உதிக்கும் ஒவ்வொரு வினாடியும் கண்கொத்திப் பாம்பாய்ப் படம் பிடித்து
ReplyDeleteசூரியனே என்னுடைய ப்ளாகில் ஒளி வீசு என்று சொல்லாமற் சொன்னது அற்புதம். அன்புடன்
காமாக்ஷிமா,
Deleteஇங்கு எதையெல்லாம் பெற கஷ்டமாயிருக்கோ அதையெல்லாம் ஊருக்குப் போய் பெற்றுக்கொள்ள வேண்டியதுதான்.
சூரியனுடன் சேர்ந்து உங்கள் பின்னூட்டமும் என்னுடைய ப்ளாக்கில் ஒளி வீசுதும்மா. வருகைக்கும் நன்றிமா, அன்புடன் சித்ரா.
சூரியோதயம் ....அழகு...நைஸ்...
ReplyDeleteவருகைக்கும், ரசித்துக் கருத்திட்டமைக்கும் நன்றி உமையாள்.
Deleteவிடுதலை ! விடுதலை ! என்று சூரியன் பாடுவது போல் இருந்தது நீங்கள் எடுத்திருக்கும் படிப்படியான படங்கள். அருமையான போட்டோகிராபர் தான் நீங்கள்...
ReplyDeleteராஜலக்ஷ்மி,
Deleteவாங்கோ வாங்கோ ! ம், அதானே ! நீங்க சொன்னது, அனிதா சொன்னது இதையெல்லாம் ஒருவரிடம் சொன்னாலும் ஒத்துக்கமாட்டிங்கிறாரே.
வருகைக்கும் நன்றிங்க.
எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அழகாக மனம் கவரும்படியாக இருப்பது இந்த இயற்கை காட்சிகள் தான் இல்லையா? தினமும் சூர்ய உதயத்தைப் பார்த்தாலும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அழகு புலப்படுகிறது!
ReplyDeleteசூரிய உதயத்தை அழகாக படம்பிடித்துள்ளீர்கள். பாராட்டுகள்.
ReplyDelete