Sunday, February 14, 2016

San Francisco !



சென்ற புதன்கிழமையன்று சான் ஃப்ரான்சிஸ்கோ செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே இரண்டொருமுறை போயிருந்தாலும், " Downtown இப்போ எப்படி இருக்கு ? முன்பு இருந்த மாதிரியே இருக்கா ? இல்லை மாற்றம் ஏதேனும் வந்திருக்கா"னு எட்டிப் பார்த்துட்டு வந்தேன்(வந்தோம்) :)

சென்ற வருடம் Golden gate park போய் வந்ததையே இன்னும் பதியாமல் இருக்கும்போது இதையாவது சூட்டோடு சூடாக பதிவாக்கிட முடிவு பண்ணி போட்டாச்சு. என்னவொன்று, வெறும் கட்டடங்களேதான் பதிவில் உள்ளன. நான் பார்த்ததும் அதைத்தானே.

கூடிய சீக்கிரம் இன்னொரு முறையும் போகவேண்டி வரும். முடிந்தால் அப்போது இயற்கையுடன் வருகிறேன். ஏற்கனவே ஒருமுறை பசிபிக் பக்கமாக போனபோது எடுத்த படங்கள் இங்கே உள்ளன.


எங்கும் விண்ணை முட்டும் கட்டிடங்கள். நிமிர்ந்து பார்த்தால் கழுத்துவலி வந்திடும், இல்லாட்டி கழுத்து சுளுக்காவது வந்தே தீரும். அப்படியும் ஒரு சில படங்கள் எடுத்தேன். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு !

 இங்கே உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.


                    கட்டிடக் கூட்டங்களுக்கிடையில் அழகான புல்வெளியும் கண்ணைக் கவர்ந்தது.

                                      *********************************************

சென்ற ஞாயிறன்று எங்கள் ஊரில் நடந்த Super Bowl 50 கால் பந்தாட்டத்துக்கு (உண்மையில் கைப் பந்தாட்டம்தான்) சான்ஃப்ரான்சிஸ்கோவில் உருவான super bowl city. எங்கும், எதிலும் இதைப்பற்றிய பேச்சாகத்தான் இருந்தது.


நம்ம ஊரில் நடந்த கால் பந்தாட்டத்தைத்தான் நேரில் பார்க்க முடியல, வந்ததே வந்தோம், அப்படியே super bowl city யையாவது நேரில் பார்த்து வரலாம் என போனால், அங்கே பல நாட்கள் கொண்டாட்டம் முடிவுக்கு வந்த நிலையில் எல்லாவற்றையும் அப்புறப்படுத்திக்கொண்டு இருந்தனர்.

நாங்கள் அங்கே நின்று பார்த்துக்கொண்டிருக்கும்போதே 50 ல் உள்ள 5 ஐ தனியே பிரித்து எடுத்தனர் :))))

சில நாட்களுக்குமுன் ஆட்டம்பாட்டம், கொண்டாட்டத்துடன் இருந்த  இந்த‌ super bowl city இப்போது வெறிச்சோடிக் கிடக்கிறது.

                                     ***********************************************
சான் ஃப்ரான்சிஸ்கோ போனால் கட்டாயம் இந்த cable car ல் ஏறிப்பார்க்க வேண்டும் என்பார்கள்.  ஆனால் இதுவரை ஏறியதில்லை. அதில் ஏற ஒரு பெரிய நீண்ட வரிசை நிற்கும் என்பதும் ஒரு காரணம். இயந்திரமயமாக்கப்பட்ட இந்த நாளிலும் manual ஆக operate செய்வது இதன் சிற‌ப்பாம்.                                 

*********************************************                         

Thursday, February 4, 2016

எங்கள் வீட்டுத் தோட்டத்தில் ____ மிளகாய் அறுவடை !



நீண்ட நாட்களாகவே மிளகாய் அறுவடையைப் பதிவிட நினைத்து, நினைத்து நாட்கள் கடந்துகொண்டே போனதுதான் மிச்சம். இனியும் தாமதம் கூடாதுனு முடிவெடுத்து இன்று செயலில் இறங்கியாச்சு :)

                                                       நிறைய காய்த்துவிட்டன !

                   இப்படித்தான், அழகழகாக அடுக்கி வைத்து படம் பிடித்து வைத்துக்கொண்டேன்.

                      செடியிலேயே பழுக்க ஆரம்பித்ததால் காயாகவே பறிக்க வேண்டியதாயிற்று.
               
                                         ஒரு செடியில் மட்டும் குண்டுகுண்டாக காய்த்தது.

பச்சை மிளகாய்க்கு பதிலாக பழ மிளகாய் வைத்து தேங்காய் சட்னி அரைத்துப் பார்த்தேன், சூப்பராவே இருந்துச்சு.

பழங்களைப் பறித்து, கழுவி, காயவைத்து எடுத்து வைத்திருக்கிறேன். ஏற்கனவே விதைக்கான ஆர்டர் குவிந்துவிட்டதால், மேற்கொண்டு ஆர்டர் பண்ண விரும்புபவர்கள் அடுத்த சீஸன்வரை பொறுமையாகக் காத்திருக்க வேண்டியதுதான், வேறு வழியில்லை !!  :)

இப்போ செடியெல்லாம் எப்படி இருக்குனு மட்டும் கேட்டுடாதீங்கோ ! போதிய சூரிய வெளிச்சம் இல்லாததாலும், குளிரினாலும் இலைகள் கறுத்து, கொட்டிக்கொண்டுள்ளன. ஆனாலும் காய் மட்டும் காய்த்துக்கொண்டுதான் இருக்கிற‌து.

வீடு மாறும்போது movers ல் ஒருவர்(அமெரிக்க இந்தியர்) மிளகாய் செடிகளைப் பார்த்ததும், "இப்படித்தான் எங்க ஊரிலும்(மெக்ஸிகோ) தோட்டத்தில் இருந்து மிளகாயைப் பறித்து அப்படியே சாப்பிடுவோம். அந்த ஞாபகம் வருது" என்று சொல்லிவிட்டு, "ஒரு செடி குடுங்களேன்", என்றார்.

ஏற்கனவே நான், மாறப்போகும் வீட்டில் சூரிய வெளிச்சம் சரியாக விழாது போலிருக்கே, இந்த செடிகள் மடிந்துவிடுமோ என்ற கவலையில் இருந்தேன். அவர் கேட்டதும் இரண்டு குட்டி குட்டி செடிகளைப் பிடுங்கி தனித்தனியாக இரண்டு குட்டிகுட்டி பிளாஸ்டிக் தொட்டிகளில் நட்டு எடுத்துக்கொடுத்தேன்.

அவரோ "வேண்டாங்க, நான் சும்மா கேட்டேன்" என்றார்.

நான் "நெஜமாத்தான் குடுக்குறேன், எடுத்துக்கோங்க" என்றேன்.

பொருட்களை வீட்டில் வந்து இறக்கிவிட்டு அந்த இரண்டு செடிகளையும் சந்தோஷமாக எடுத்துச் சென்றார்.

அந்த இரண்டு குட்டிச்செடிகளிலும் நிறைய பூக்கள் & பிஞ்சுகள் இருந்தன. இந்நேரம் அவர்கள் ஜம்மென்று வளர்ந்து இருப்பார்கள் :)