வானுயரக் கட்டிடங்களின் அணிவகுப்பு இல்லாத இடத்தில் சூரியனின் மறைவு எவ்வளவு கொள்ளை அழகாக இருக்கிறது ! ஊரில், சகோதரி வீட்டில் இருந்தபோது எடுத்தது.
கிராமம் என்றாலே காக்கை, குருவி இல்லாமலா !
'இயற்கை ஒழுங்காகத் தன் வேலையை செய்கிறதா' என வேவு பார்க்கும் காக்கைகள் !
'கொஞ்சம் நீ பாத்துக்கோ' என சொல்லி பறந்துவிட்டதோ ஒரு காக்கா !
ஹா ஹா ! என்னை நம்பி அடுத்தவரும் எஸ்கேப்.
கதிரவனை இங்க அங்கனு எங்கயும் நகரவிடாம எவ்வளவு பத்திரமா பிடிச்சிருக்கேன் பாருங்க !!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கிராமத்து மாலை இருந்தால் காலையும் இருக்கும்தானே ! அது அடுத்த பதிவில் !
சித்ரா எனக்கு ஒரு படமும் தெரியல /என் ப்ளாகிலும் இன்னோர் ப்ளாகிலும்அதே ப்ராப்ளம் .நாளைக்கு மீண்டும் வரேன்
ReplyDeleteஆஆஹா ! இப்போ எல்லா படங்களும் அழகா தெரியுது ..
Delete
Deleteதெரியலையேன்னு விட்டுட்டு போகாம மீண்டும் வந்து பார்த்து கருத்திட்டதில் மகிழ்ச்சி ஏஞ்சலின்.
வணக்கம்
ReplyDeleteபடங்களுடன் சொல்லிச் சென்ற விதம் அனைவரின் மனதிலும் இலகுவாக புரியும்... பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி ரூபன்.
DeleteNice clicks!!
ReplyDeleteவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி மஹி.
Deleteரசித்தேன்...
ReplyDeleteரசித்துக் கருத்திட்டமைக்கு நன்றி தனபாலன்.
Deleteஎனக்கும் இந்த சூரியன் உதிப்பது,மறைவது பார்க்க ரெம்ப பிடிக்கும்.மிக அழகா இருக்கும். இங்கு மலைகள் வேறா.இன்னும் சூப்பரா இருக்கும். உங்க படங்கள், வர்ணனை அழகு...
ReplyDeleteப்ரியசகி,
Deleteஉங்க கார்த்திகை பிறையைப் பார்த்தபோதே நினைத்தேன் அங்கிருந்து உதயம் & மறைவு எவ்வளவு சூப்பரா இருக்கும் என்று. சீக்கிரமே பிடிச்சு போடுங்க ப்ரியசகி.
ரசித்தோம் படங்களை!
ReplyDeleteரசித்துக் கருத்திட்டமைக்கு நன்றி கீதா.
Deleteநல்ல பதிவு, இயற்கை ரசிக்க அளவே இல்லை, சூரியனின் உதயம்,மறைவு, கடல் அலை, விதையின் துளீர், குயில்களின் இசை, மழைத்துளி இன்னும்,இன்னும்,இன்னும் இயற்கையின் அழகை ரசித்துக்கொண்டே இருக்கலாம்.
ReplyDeleteஉடல் ஆரோக்கியத்திற்க்கு, இயற்கை மிகப்பெரிய மருந்து ( No BP,Stress ).
உங்களுடன் நாங்களும் ரசித்தோம், தொடர்ந்து மலரட்டும் இயற்கை எழில்.
இயற்கையை ரசிப்பதில் இவ்வளவு நன்மைகளா ! ஆமாங்க, இயற்கையில் ஒரு உற்சாகம் உண்டு. வயல் முழுவதும் விதை விதைத்தபின், முக்கியமா இருவித்திலை, அவை ஒன்றாக முளைத்து வரும்போது இருக்கும் அழகே தனிதான்.
Deleteநிச்சயம் பதிவுகள் தொடரும். வருகைக்கு நன்றி ராஜேஷ்.
சூப்பருங்கோ...
ReplyDeleteகிராமம் அழகு தான் இல்லையா...
.நானும் அக்டோபரில் 8 வது மாடியில் இருந்து சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் புகைப்படம் எடுத்து வைத்து இருக்கிறேன். கட்டடங்களுக்கு இடையில் உதயம். பதிவிட காத்திருக்கிறது. பார்க்கலாம்.
உமையாள்,
Deleteகட்டிடங்களுக்கிடையிலான உதயம் ! அதுவும் ஒரு அழகுதான். சீக்கிரம் போடுங்கோ, நாங்களும் காணும் ஆவலில் காத்திருக்கிறோம்.
சூரியனையே கேமிராவிற்குள் சிறைப் படுத்தி விட்டீர்களே. சீக்கிரம் அவர் விடுதலையானதைப் பதிவாக்குங்கள்.
ReplyDeleteவிடுவிச்சிடலாம்னு சொன்ன பிறகும் விடுவிக்கலைன்னா எப்படி ? சீக்கிரமே விடுதலையானதைப் பதிவாக்கிடுறேன்.
Deleteகல்க்குங்க தோழி.
ReplyDeleteநீங்க ரசனைக்காரர் மட்டுமல்ல ஒரு நல்ல புகைப்பட கலைஞஉம் கூட.
அருமை, வாழ்த்துக்கள்.
அனிதா,
Deleteஉங்களின் பாராட்டுக்கும், வருகைக்கும் நன்றி.
நான் முதலில் போட்ட பதிலைக் காணோமே !
அழகான படங்கள். பாராட்டுகள் சித்ரா....
ReplyDeleteஅடுத்து அடுத்து இந்தப் புகைப்படங்களைப் பார்த்தவுடன் 'காலையும் நீயே, மாலையும் நீயே..!' பாடல் நினைவிற்கு வருகிறது, சித்ரா! ஏ. எம் ராஜாவின் தேன் குரலில் அமுதாக வழியும் இந்தப் பாடல்.
ReplyDeleteபுகைப்படங்கள் ஏ.ஒன்!
அழகான படங்கள். சூரியனை சிறைபிடித்திருப்பது அருமை.
ReplyDelete